கருக்கலைப்பு, ஒப்புரவு அருட்சாதனம் இவை குறித்த மத்ரித் தலத்திருச்சபை செயலுக்கு பேராயர்
டோலன் பாராட்டு
ஆக.22,2011. பொதுவாக தல ஆயரே, கருக்கலைப்பு செய்வோருக்கு மன்னிப்பு வழங்கும்வேளை, இந்த
26வது உலக இளையோர் தினத்தில் மத்ரித் உயர்மறைமாவட்டம் இம்மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை
அனைத்துக் குருக்களுக்கும் வழங்கியது குறித்துத் தனது பாராட்டைத் தெரிவித்தார் நியுயார்க்
பேராயர் திமோத்தி டோலன். திருச்சபை இத்தகைய சிறப்பு நாட்களில், இத்தகைய மன்னிப்புக்களை
வழங்கி மக்கள் சமாதானத்துடன் செல்வதற்கு வழி செய்கின்றது என்று சி.என்.எ. கத்தோலிக்கச்
செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார் பேராயர் டோலன். ஒப்புரவு அருட்சாதனத்தில்
இவ்வாறு மன்னிப்பு வழங்குவதன் மூலம், இத்தகைய உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் மக்கள்
இறையருளுடன் பங்கு கொள்ள உதவ முடியும் என்றும் பேராயர் டோலன் கூறினார். ஆகஸ்ட் 16
முதல் 21 வரை மத்ரித்தில் நடைபெற்ற இந்த உலக இளையோர் தினம் சிறப்புற அமைவதற்கு அமெரிக்க
ஐக்கிய நாட்டு நெவாடா மாநிலத்தில் உள்ள உலகளாவிய இந்துமதக் கழகத்தலைவர் Rajan Zed தனது
நல்வாழ்த்துக்களைத் திருத்தந்தைக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.