மும்பையில் கிறிஸ்துவக் கலைப்படைப்புக்கள் அடங்கிய அருங்காட்சியகம்
ஆக.18,2011. கிறிஸ்துவக் கலைப்படைப்புக்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்று மும்பையில்
அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது. மும்பை Goregaonல் உள்ள புனித பத்தாம் பத்திநாதர்
குருமடத்தில் 2000 சதுர அடி பரப்பில் இந்த அருங்காட்சியகம் உருவாகி வருகிறது. 200
ஆண்டுகள் பழமை வாய்ந்த பலிப்பீடம், முன்னாள் திருத்தந்தை ஒருவர் அணிந்திருந்த தொப்பி
ஆகியவை உட்பட, 150 பழமை வாய்ந்த பொருட்கள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும். கி.பி.முதல்
நூற்றாண்டிலிருந்து இன்று வரை கிறிஸ்தவம் கலை, கலாச்சாரம் இவற்றிற்கு ஆற்றிவரும் சேவைகளை
விளக்கும் பல அரும்பொருட்களை மக்கள் பார்வையிடுவதால், கிறிஸ்துவத்தைப் பற்றி மக்கள் இன்னும்
அறிந்து கொள்ள இவ்வருங்காட்சியகம் பெரும் உதவியாக இருக்கும் என்று அருங்காட்சியகக் குழுவின்
தலைவரான அருள்தந்தை Warner D'Souza கூறினார். மக்களுக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினரான
பள்ளி மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் ஒரு கருவூலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக
அருள்தந்தை D'Souza மேலும் கூறினார்.