2011-08-18 16:02:42

உலக இளையோர் தின நிகழ்வுகளில் அமெரிக்க ஆயர்களின் உரை


ஆக.18,2011. உணர்வுகளின் அடிப்படையில் மட்டும் கிறிஸ்துவுடன் நமது உறவை வளர்ப்பது உண்மையாகவும், உறுதியாகவும் இராது என்று Philadephia உயர் மறைமாவட்டத்திற்கு நியமனம் பெற்றுள்ள பேராயர் Charles Chaput கூறினார்.
உலக இளையோர் தின நிகழ்வுகளையொட்டி மத்ரிதில் கூடியிருக்கும் இளையோரில் ஆங்கிலம் பேசும் ஆயிரக்கணக்கான இளையோருக்கு இப்புதன் மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் பேராயர் Chaput இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவை எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்ற முடியும் என்பதிலும், அவரை பிறருக்கு எடுத்துச் சொல்லும் மன உறுதியுமே நாம் எவ்விதம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்பதை உறுதி செய்யும் என்று பேராயர் Chaput இளையோரிடம் கூறினார்.
இதற்கிடையே, மத்ரிதில் கூடியுள்ள அமெரிக்க இளையோரிடம் பேசிய நியூயார்க் பேராயர் Timothy Dolan அண்மையில் நியூயார்க் மாநிலம் ஒரே பாலின திருமணங்களை சட்டமாக்கியது அங்குள்ள கத்தோலிக்கக் குடும்பங்களையும், இளையோரையும் பெரிதும் பாதிக்கும் என்று எச்சரித்தார்.
நன்னெறிகளுக்கு எதிராக உலக அரசுகள் உருவாக்கும் பல சட்டதிட்டங்களுக்கு ஒரு மாற்றாக, ஆண், பெண் திருமண உறவில் நிலைத்திருந்து உலகிற்கு மாற்று சாட்சிகளாக வாழ்வது இளையோருக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று பேராயர் Dolan சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.