2011-08-17 15:20:54

தீவிரமாகும் உணவுப் பிரச்சனை: உலக வங்கி


ஆக.17,2011. உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்வாகவும், உறுதியற்ற நிலையிலும் தொடர்வது வளர்ந்து வரும் நாடுகளில் ஏழை மக்களுக்கு ஆபத்தாக அமையும் என்றும், ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளில் காணப்படும் பஞ்சம், வறட்சி ஆகியவற்றுடன் இது மேலும் ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும் என்றும் உலக வங்கி கூறுகிறது.
சராசரி உணவு விலையானது கடந்த பிப்ரவரியில் மிகவும் கடுமையாக அதிகரித்திருந்ததை விட சிறிதளவு குறைவாகவே இப்போது இருக்கின்ற போதிலும், ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததை விட மூன்றில் ஒரு மடங்கு அதிகமாக அது இருக்கின்றது என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
உலகில் சோளத்தின் விலை 84 விழுக்காடும், கோதுமையின் விலை 55 விழுக்காடும் அதிகரித்துள்ளன என்றும் உலக வங்கியின் அந்த அறிக்கை கூறுகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா, சொமாலியா, ருவண்டா ஆகிய நாடுகளில் சோளத்தின் விலை 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.