எத்தியோப்பிய முகாம்களில் குழந்தை இறப்புக்கள் அதிர்ச்சியூட்டுகின்றன –
ஐ.நா.
ஆக.17,2011. எத்தியோப்பிய அகதிகள் முகாம்களில் இடம் பெறும் குழந்தை இறப்புக்கள் அதிர்ச்சியூட்டும்
விதத்தில் இருக்கின்றன என்றும் இங்கு ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் தினமும் பத்துப் பேர்
வீதம் இறக்கின்றனர் என்றும் ஐ.நா.கூறியது. ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேர் வாழும் Kobe
முகாமில் தட்டம்மை நோயும் பரவியுள்ளதால் இவ்விறப்பு விகிதம் அதிகரித்திருக்கின்றது என்று
ஐ.நா. மேலும் கூறியது. 2011ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 15
ஆயிரம் சொமாலியர்கள் உணவு மற்றும் தண்ணீர் கேட்டு கென்யா மற்றும் எத்தியோப்பிய முகாம்களுக்கு
வந்து கொண்டிருக்கின்றனர் என்று ஐ.நா.கூறியது. கிழக்கு ஆப்ரிக்காவில் சுமார் ஒரு கோடியே
20 இலட்சம் பேர் கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் வறட்சியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சொமாலியாவில் Siad Barreவின் அரசு கவிழ்ந்ததிலிருந்து அந்நாடு கடந்த 20 வருடங்களாக
கலவரங்களின் பூமியாக இருந்து வருகிறது எனக் கூறப்படுகின்றது.