ஆக.13,2011. அதிகக் கடன் சுமையுள்ள இருபது வளரும் நாடுகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது
இடத்தில் இருக்கின்றது என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். இவ்வெள்ளிக்கிழமை
லோக்சபாவில் கேள்வி-பதில் நேரத்தில் இதனைத் தெரிவித்த முகர்ஜி, “உலக வங்கி வெளியிட்டுள்ள
உலகளாவிய நிதி வளர்ச்சி 2011” என்ற அறிக்கையின்படி, 2009ல் அதிக வெளிநாட்டுக் கடன் சுமையுள்ள
இருபது வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்றார். இருந்தபோதிலும்,
இந்தக் கடன் சுமை சமாளிக்கக் கூடியதே என்றும் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும்.
இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். உலக வங்கி வெளியிட்ட இந்தப் பட்டியலில்,
சீனா, இரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளன என்றார்
முகர்ஜி.