"ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
ஆக. 12,2011"வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை, இந்திய மக்கள் அனைவரும்
மின் விளக்குகளை அணைத்து விட்டு தீபஒளி ஏற்ற வேண்டும்,'' என ஹசாரே குழுவினர் அழைப்பு
விடுத்துள்ளனர். அன்னா ஹசாரே குழுவினரின் உயர்மட்டக் குழு கூட்டம் இவ்வியாழனன்று டில்லியில்
நடத்திய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி
வரும் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும் என ஹசாரே குழுவின்
அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஊழல், ஏழ்மை மற்றும் எழுத்தறிவின்மையால் நமக்கு முழுமையான
சுதந்திரம் கிடைக்கவில்லை. எனவே இதை உணர்த்தும் வகையில் இத்திங்கள் இரவு 8 மணி முதல்
ஒன்பது மணி வரை, நாட்டு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீப ஒளி ஏற்ற
வேண்டும் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.