2011-08-11 15:24:08

திருத்திய விடைத்தாளை மாணவர் பார்க்க அனுமதி


ஆக.11,2011. இந்தியாவில் மாணவர்கள் தம்முடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பார்க்க முடியும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருத்தப்பட்ட விடைத்தாள்களும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு 'தகவல்'தான் என இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அரசு பணிகளுக்கான தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள், பள்ளித் தேர்வுகள், தொழிற்சேவை அமைப்புகளுக்கான தேர்வுகள் போன்றவற்றுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்.
இந்தியாவில் எந்த ஒரு மாணவனும் தான் எழுதிய எந்த ஒரு பரிட்சைக்கான திருத்தப்பட்ட விடைத்தாளையும் பார்க்க உரிமை உள்ளது என்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
பிரீத்தம் ரூஜ் என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர், தனது பல்கலைக்கழகத்தில் தான் எழுதிய பரிட்சைகளின் விடைத்தாள்களைப் பார்க்க வேண்டும் என்று கோரி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.