2011-08-10 15:24:58

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சுனாமியால் தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் பெரும் பாதிப்புக்கள்


ஆக.10,2011. மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமி ஆகியவை தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
தென் துருவத்தில் கடந்த 46 ஆண்டுகள் உறுதியாக இருந்த Sulzenberger என்று அழைக்கப்படும் பனிப்பரப்பில் 125 சதுரக் கி.மீ. அளவான பனிப்பரப்பு சிதறுண்டு, கடலில் கலந்துள்ளதை செயற்கைக் கொள் மூலம் பதிவான புகைப்படங்கள் காட்டுகின்றன.
ஜப்பானில் உருவான சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் 13000 கி.மீ. தூரம் பசிபிக் பெருங்கடலில் பயணித்து, Sulzenberger பனிப்பரப்பை அடைந்து அதன் ஒரு பகுதியை உடைத்துள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.