2011-08-09 15:11:47

இப்புதனை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கின்றனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்


ஆக.09,2011. தாழ்த்தப்பட்ட சமூகம் குறித்த இந்திய அரசியலமைப்பு விதி உருவாக்கப்பட்டதன் 61ம் ஆண்டு நிறைவையொட்டி இப்புதனை கறுப்பு நாளாக கடைபிடிக்கின்றனர் இந்திய கிறிஸ்தவர்கள்.
இந்து மத்த்தினரைத்தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயமாகக் கருதப்படவோ, சலுகைகள் பெறவோ தடைச்செய்யும் இந்த அரசியலமைப்பு விதி குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிடும் விதமாக இந்தக் கறுப்பு தினத்தை இந்தியாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து அறிவித்துள்ளன.
டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ மற்றும் வட இந்திய திருச்சபையின் பொதுச்செயலர் ஆல்வன் மசிஹ் ஆகியோர் தலைமையில் இப்புதனன்று டெல்லியில் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ தலித் இனத்தவர்க்கான சலுகைகள் குறித்த ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக அறிவித்துள்ளார் சிறுபான்மையினருக்கான இராசாங்க அமைச்சர் வின்சென்ட் பாலா







All the contents on this site are copyrighted ©.