2011-08-08 16:01:34

பேராயர் எலஞ்சிக்கல் இறைபதம் அடைந்தார்


ஆக.08, 2011. கேரளாவின் வேராப்போளி முன்னாள் பேராயர் கொர்னேலியஸ் எலஞ்சிக்கல் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியத் திருச்சபை மற்றும் அரசியல் தலைவர்கள், தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கற்தந்திகளை அனுப்பியுள்ளனர்.
சிறுநீரகம் செயலிழந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பேராயர் எலஞ்சிக்கல் இஞ்ஞாயிறு தன் 92ம் வயதில் காலமானார்.
வேராப்போளியின் தூய பிரான்சிஸ் அசிசிப் பேராலயத்தில் இச்செவ்வாயன்று இவரின் அடக்கச்சடங்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1918ம் ஆண்டு கேரளாவின் கரல் எனுமிடத்தில் பிறந்த பேராயர் எலஞ்சிக்கல் 1945ல் குருவாகவும் 1971ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். விஜயபுரம் ஆயராகவும் பின்னர் வேராப்போளி பேராயராகவும் பணியாற்றியுள்ள இவர் 1996ம் ஆண்டு ஆயர் நிர்வாகப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
பேராயர் கொர்னேலியஸ் எலஞ்சிக்கல்லின் மரணம் குறித்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து இந்திய மத்திய அமைச்சர்கள் கே.வி. தாமஸ், ஏ.கே. ஆன்டனி, கேரள முதல்வர் ஓமன் சாண்டி ஆகியோரும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.