2011-08-08 16:00:45

நேபாளத்தில் ஏழைகளுக்கு உதவப் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது காரித்தாஸ் அமைப்பு


ஆக.08, 2011. நேபாளத்தில் ஏழைகளுக்கு உதவும் தங்கள் அர்ப்பணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் மேற்குப் பகுதியில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது நேபாள காரித்தாஸ் அமைப்பு.
ஏழைகள் நிரம்பியுள்ள பகுதிகளுக்கு இந்த அலுவலகம் மூலம் மேலும் திறமையுடன் பணியாற்ற முடியும் என்றார் அந்நாட்டு ஆயர் அந்தோனி சர்மா.
மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் அவசரகால உதவிகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் நேபாளத்தில் காரித்தாஸ் அமைப்பு செயல்படுத்தி வருவதாக அறிவித்தார் ஆயர்.







All the contents on this site are copyrighted ©.