ஆக.08, 2011. சீனாவின் Heze மறைமாவட்டத்தைச் சேர்ந்த நான்கு குருக்கள் அரசால் கைதுச்செய்யப்பட்டு,
உணவின்றி தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களின் விடுதலைக்காகத் தலையிடுமாறு
அகில உலகத்திருச்சபையிடம் விண்ணப்பித்துள்ளனர் சீனக் கத்தோலிக்கர். உடன் குருக்களுக்குத்
தியானம் வழங்கிவிட்டு தூங்கிக்கொண்டிருந்த குருக்கள் Wang Chengli, Zhao Wuji, Xianyang,
Sun Guichun ஆகிய நான்குபேரையும் சுவரேறிக் குதித்து கைது செய்த காவல்துறை, அவர்களைச்
சந்திக்க எவரையும் அனுமதிக்காததுடன், அவர்கள் சீன அரசின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ சபையில்
இணையக் கட்டாயப்படுத்தி வருகின்றது.