சொமாலியாவிற்கு இந்தியா உணவுப்பொருட்கள் வழங்க முடிவு
ஆக.05,2011. பசி, பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியவிற்கு இந்தியா சார்பில் உணவுப்பொருட்கள்
அனுப்பி வைக்க உள்ளதாகவும், இதற்கான முறையான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படவுள்ளதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரிக்க நாடான சொமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவின்
சில பகுதிகளி்ல் பஞ்சத்தால் 75 இலட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்காக ஏங்கி வரும்வேளை, இந்தியா
சொமாலியாவிற்கு போர்க்கால அடிப்படையில் விரைவில் உணவுபொருட்களை அனுப்பி வைக்க உள்ளது
என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்ட
போது இந்தியா அரசியினை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.