உண்மையைக் கொண்டு வரும் எந்தவிதமான விசாரணைகளையும் திருச்சபை வரவேற்கின்றது
ஆக.05,2011. மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரிசா மாநிலத்தில் இந்துமதத் தலைவரும் அவரோடு
சேர்ந்த நான்கு பேரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைய மீண்டும்
தொடங்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது குறித்து தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்
தலத்திருச்சபை அதிகாரிகள். உண்மையைக் கொண்டு வரும் எந்தவிதமான விசாரணைகளையும் திருச்சபை
வரவேற்கின்றது என்று புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட அருட்பணியாளர் சந்தோஷ் திகால் கூறினார். கந்தமாலில்
சுவாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புதியக் குற்றப்பத்திரிகையைத்
தயார் செய்யுமாறு ஒரிசா உயர்நீதிமன்றம் காவல்துறையைக் கேட்டுள்ளது. சுவாமி லஷ்மானந்தா
சரஸ்வதி கொலை செய்யப்பட்டதற்கு மாவோயிஸ்டுகள் தொடக்கத்தில் பொறுப்பேற்றதையும் விடுத்து
இந்துமதத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைக் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இடம் பெற்ற
வன்முறையில் 90க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இறந்தனர் மற்றும் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள்
வீடுகளை இழந்தனர்.