மட்டுகாமாவில் திருச்சிலுவை மீண்டும் நாசப்படுத்தப்பட்டுள்ளது
ஆக.04,2011. இலங்கையின் புத்தமத நகரமான மட்டுகாமாவில் புனித மரியன்னை ஆலயக் கல்லறைத்
தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள திருச்சிலுவை மீண்டும் ஒருமுறை நாசப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில்
தீ வைக்கப்பட்ட இத்திருச்சிலுவை மீண்டும் அவ்விடத்தில் வைக்கப்பட்டது. தற்சமயம் நாசவேலைக்காரர்கள்
இதனை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளனர் என்று பங்குக்குரு தேவ்ஷன் சங்கா கூறினார். கொழும்பு
உயர் மறைமாவட்டத்திலுள்ள புனித மரியன்னை ஆலயக் கல்லறைத் தோட்டமும் அங்குள்ள சிற்றாலயமும்
அண்மை ஆண்டுகளில் தொடர்ந்து குறிவைத்து அவமானப்படுத்தப்படுகின்றன என்று அக்குரு மேலும்
கூறினார். மட்டுகாமாவில் சுமார் 250 தமிழ் மற்றும் சிங்களக் குடும்பங்கள் உள்ளன. மற்றவர்கள்
புத்தமதத்தினர்.