ஆக.04,2011. CCI என்ற இந்திய கத்தோலிக்க அவையின் 11வது பொதுக்குழுக் கூட்டம், கொச்சியில்
வருகிற நவம்பர் 24 முதல் 27 வரை நடைபெறுகின்றது. “நல்லதோர் இந்தியாவை உருவாக்குவதில்
திருச்சபையின் பங்கு” என்ற தலைப்பில் இடம் பெறும் இக்கூட்டத்தில், இந்தியாவின் 164 மறைமாவட்டங்களிலிருந்து
ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். திருச்சபை
மற்றும் நாட்டைப் பாதிக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்தத் தங்கள் அனுபவங்கள், சிந்தனைகள்
மற்றும் பரிந்துரைகளை இப்பிரதிநிதிகள் பகிர்ந்து கொள்வார்கள். இந்த CCI அமைப்பானது
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான பிரதிநிதித்துவக்
குழுவாகும்.