2011-08-03 16:35:23

சிரிய அதிகாரிகள் மனிதப்பண்பற்றச் செயல்களை நிறுத்துமாறு ஐ.நா. வேண்டுகோள்


ஆக.03,2011. சிரியாவில் இடம் பெறும் சனநாயக ஆதரவுப் போராட்டங்களில் கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 145 பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்து ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவநீதம்பிள்ளை தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
அப்பாவி பொது மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு நவநீதம்பிள்ளை சிரிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தனிப்பட்ட மனித உரிமை குழுக்கள், மனித உரிமைகள் அவையினால் குறிக்கப்பட்ட உண்மையை அறியும் பணிக்குழு போன்றவற்றை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதன் மூலம் அந்நாட்டின் நிலைமையை உலக சமுதாயத்தின் கண்களுக்கு மறைக்க முபற்சிக்கின்றது என்றும் நவநீதம்பிள்ளை குற்றம் சாட்டினார்.







All the contents on this site are copyrighted ©.