2011-08-03 16:32:56

கோஜ்ரா வன்முறைத் தாக்குதல்களுக்கு முஸ்லீம் தலைவர்கள் வருத்தம்


ஆக.03,2011. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் கோஜ்ரா நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறையில் தங்கள் உறவுகளையும் வீடுகளையும் தொழிலையும் இழந்த மக்களிடம் இரண்டு முஸ்லீம் தலைவர்கள் பொதுப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் நடந்த ஈராண்டு நினைவாக கோஜ்ராவின் இயேசுவின் திருஇதய ஆலயத்தில் இத்திங்களன்று நடைபெற்ற பல்சமயக் கருத்தரங்கில் கலந்து கொண்ட இரண்டு இசுலாம் சூஃபிகள் இந்த வன்முறைக்காக வருந்தினர்.
இந்த வன்முறையானது “இசுலாம் உணர்வுகளுக்கு” எதிரானது என்று சொல்லி இதற்காகத் தாங்கள் பெரிதும் வருந்துவதாக இந்த இசுலாம் யோகிகள் கூறினர்.
2009ம் ஆண்டு ஆகஸ்டில் கோஜ்ரா மற்றும் அதற்கு அருகிலுள்ள கிராமக் கிறிஸ்தவச் சமூகங்களுக்கு எதிராக 800க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வன்முறையில் இறங்கி, கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர் மற்றும் கிறிஸ்தவர்களைக் கண்மூடித்தனமாய்த் தாக்கினர். இதில் 10 கத்தோலிக்கர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.