ஆக.02,2011. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விஞ்சிவிடும்,
இதனால் இப்பூமியில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று நிபுணர்கள்
கருத்து தெரிவித்தனர். இவ்வாண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் 121
கோடிப் பேர் வாழ்கின்றனர் எனவும், அதிகமான மக்கள் வேலை தேடி நகரங்களில் குடியேறுகின்றனர்
எனவும் அத்துடன் மக்கள்தொகையும் கூடும் எனவும் நிபுணர்கள் கூறினர்