பங்களாதேஷில் திருமண வாழ்க்கையில் உளவியல் ஆலோசகர்கள் தேவை
ஆக.02,2011. திருமண வாழ்க்கையில் அதிகரித்து வரும் இணக்கமின்மை களையப்பட ஒப்புரவு முயற்சிகள்
அதிகமாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் ஆயர் பேரவையின் குடும்பப் பணிக்குழு
கூறியது. பங்களாதேஷில் குடும்ப வன்முறைகள் பரவலாக இடம் பெறுகின்றன என்றும், இவை கொலை
அல்லது தற்கொலைகளில் முடிகின்றன என்றும் கடந்த மாத இறுதியில் டாக்காவில் நடைபெற்ற கருத்தரங்கில்
கூறப்பட்டது. வரதட்சணை கேட்டுக் கொலைகள் இடம் பெறுவதாயும், இவை கிராமங்களில் அதிகம்
என்றும் அக்கருத்தரங்கில் மேலும் கூறப்பட்டது.