சூடானில் இனஒழிப்பு ஒரு விதிமுறையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது - சூடான் ஆயர் குற்றச்சாட்டு
ஆக.02,2011. சூடானில் இனஒழிப்பு ஒரு விதிமுறையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று
குறைகூறிய அதேவேளை, நூபா மலைப் பகுதி மக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார் சூடானின்
எல் ஒபெய்ட் ஆயர் Macram Max Gassis. கென்ய நாட்டு நைரோபியில் இறந்த ஆயர் Ceasar Mazzolari
ன் நினைவுத் திருப்பலியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஆயர்
Gassis, நூபா மலைப்பகுதி மக்கள் பற்றி ஊடகங்கள் அதிகமாகப் பேச வேண்டும் என்றார். தற்போது
சூடான் அரசு, கடந்த மே மாதத்திலிருந்து நூபா மலைப்பகுதி மக்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து
விட்டுள்ளது என்றும் இனஅழிப்பு நிலைக்கு அது வந்தடைந்துள்ளது என்றும் ஆயர் குறை கூறினார்