2011-08-01 16:12:55

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஆக.01, 2011. பசி, மற்றும் தாகத்தால் துயருறுவோர் குறித்து எவரும் பாராமுகமாய் இருக்க முடியாது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்து இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, அப்பமும் மீனும் பலுகிய புதுமை குறித்து எடுத்துரைத்து, பசியால் வாடுவோருக்கு உதவ நம் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் ஆற்றவேண்டியது நம் கடமை என்றார். இறைவன் மனுவுருவானதும், மீட்பு நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை என்ற பாப்பிறை, இயேசுவின் அப்பம் பலுகச்செய்த புதுமை, மக்கள் மீதான அவரின் கருணையின் வெளிப்பாடாகவும் நமக்கான எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்றார்.
பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஆப்ரிக்க மக்கள் குறித்து எவரும் பாராமுகமாய் இருக்க முடியாது என மேலும் கூறினார் அவர்.
இஞ்ஞாயிறு திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட இயேசு சபை நிறுவனர் புனித இஞ்ஞாசியார் குறித்தும் எடுத்தியம்பி, அவரும் ஏழைகள் மீது கொண்டிருந்த தணியாதத் தாகத்தையும் மேற்கோள்காட்டினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.