2011-08-01 16:17:14

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் 1700 பேர் கடத்திச் செல்லப்பட்டனர்


ஆக.01, 2011. இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1700 பேர் கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டில் 926 பேரும் 2010 ம் ஆண்டில் 774 பேரும் கடத்தப்பட்டனர்.
இதில் 202 சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
275 சம்பவங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது







All the contents on this site are copyrighted ©.