2011-07-30 14:05:33

மெக்சிகோ-அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லைப்புற மறைமாவட்டம் அமைதிக்கான ஒரு நாள் செபம்


ஜூலை 30,2011. மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லையிலுள்ள Matamoros மறைமாவட்டம், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை மற்றும் வன்முறைச் சூழல் ஒழிய வேண்டுமென்பதற்காக 24 மணி நேர அமைதிக்கானச் செப வழிபாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரிகளுடன் நடத்தப்படும் சண்டையில் வன்முறையும் பாதுகாப்பின்மையும் இருக்கின்றன என்று சொல்லி அவை களையப்பட இந்தச் செப பக்தி முயற்சி நடத்தப்படவிருக்கின்றது.
போதைப்பொருள் வியாபாரக் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அருட்பணி Marco Durán கொல்லப்பட்ட முதல் நினைவு மாதத்தையொட்டி வருகிற செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இந்தச் செப பக்தி முயற்சி இடம் பெறுகின்றது.








All the contents on this site are copyrighted ©.