2011-07-28 15:24:13

வட கொரிய மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை வழங்க உள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு


ஜூலை 28, 2011. வட கொரியாவில் பசியாவில் வாடும் மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை நேரடியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு.
அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் வடகொரிய அரசுக்கு எவ்வித உதவிகளையும் வழங்குதல் கூடாது என்பது உண்மையெனினும், பசியால் வாடும் மக்கள் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது என்ற காரித்தாஸ் அமைப்பு, தங்கள் உதவிகள் யாவும் மக்களை நேரடியாகச் சென்றடைவதாக இருக்கும் என்றது.
தென்கொரியா மீது வட கொரியா திடீர்த் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடகொரியாவிற்கான தென்கொரிய உதவிகள் தற்போது சிறிய அளவில் ஐந்து அரசு சாரா அமைப்புகள் மூலம் துவக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.