2011-07-28 15:28:54

கேமரூனின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவை தலைவராக அந்நாட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளது அரசு


ஜூலை 28, 2011. கேமரூன் நாட்டின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவையினை வழிநடத்துபவராக அந்நாட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளார் அரசுத்தலைவர் பால் பியா.
அரசு நிர்வாகங்களிடையே தொடர்புகளை உருவாக்கி உயர் அதிகாரிகளுக்கு உதவும் இம்முக்கியப் பொறுப்பு அரசுத்தலைவர் மூலம் கேமரூனின் கிரிபி ஆயர் ஜோசப் பெஃபே அதேபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தின் செய்திகளைத் தேசியப் பத்திரிகைகளுக்கு நேர்மையாக வழங்க, குறிப்பாக வரும் அக்டோபர் அரசுத்தலைவர் தேர்தலுக்குத் தயாரிப்பாக வழங்க இத்தகையதொரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைத்துறையில் அதிக அனுபவமுடைய ஆயர் பெஃபே அதேபா, ஏற்கனவே ஆப்ரிக்க ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத்துறைக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், தற்போது கேமரூன் ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத்துறைக்குத் தலைவராக இருந்து பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே கேமரூன் தேர்தல் அவையின் அங்கத்தினராகப் பிறிதொரு ஆயர் Dieudonne Watio வை அரசுத்தலைவர் நியமித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.