டிரிப்போலியில் குடிமக்கள் மீதான நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு டிரிப்போலி
அப்போஸ்தலிக்க நிர்வாகி கண்டனம்
ஜூலை27,2011. லிபிய நாட்டு டிரிப்போலியில் நேட்டோப் படையினர், குடிமக்கள் மீது குண்டுவீச்சுத்
தாக்குதல்களை நடத்துவதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் டிரிப்போலி அப்போஸ்தலிக்க
நிர்வாகி ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி. வத்திக்கான் ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம்
இவ்வாறு தெரிவித்த ஆயர் மர்த்தினெல்லி, உணவுக் கடைகள் போன்ற அப்பாவி குடிமக்களைப் பாதிக்கும்
இடங்களை நேட்டோப் படையினர் தாக்குகின்றனர் என்று குறை கூறினார். தொடர் குண்டுவீச்சுக்களால்
அப்பாவி மக்கள் மனஅழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆயர் மேலும் கூறினார்.