2011-07-26 16:37:44

தென்கொரியாவின் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனை குறித்து ஆயர்கள் கேள்வி


ஜூலை 26, 2011. சிறார்களைப் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்துவோரை வேதியல் முறையில் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனைக்கு உட்படுத்தும் தென்கொரிய அரசின் புதிய சட்டம் குறித்து குறை கூறியுள்ளது தலத்திருச்சபை.
15 வயதிற்குட்பட்டச் சிறார்களிடம் பாலின முறையில் தவறாக நடந்து கொள்வோர் ஆண்மை இழக்க வைக்கப்படுவார்கள் என்ற அரசின் புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த தென் கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி குரு பால் லீ சங் யாங், சிறார்களுக்கு எதிரான பாலினக் குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால், இத்தகைய செயற்கைத் தண்டனைகளுக்குப் பதிலாக மாற்றுத் தண்டனைகளைக் கொணர்வது நல்லது என்றார்.
இத்தகைய தண்டனைகள் மூலமாக பாலினக் வகைக் குற்றங்களை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது கொரிய தலத்திருச்சபை.
தென்கொரிய அரசின் கூற்றுப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் மீதான பாலின வகை அத்துமீறல்கள் அந்நாட்டில் 52.7 விழுக்காடு அதிகரித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.