2011-07-23 15:54:52

நார்வே தாக்குதல்கள் குறித்து WCC பொதுச் செயலர் அதிர்ச்சி


ஜூலை 23,2011. நார்வே பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துக் கவலை தெரிவித்த WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலரான பாஸ்டர் Olav Fykse Tveit, இவை அப்பாவி மக்களுக்கு எதிரான கொடூரமான மற்றும் இதுவரை நடந்திராத வன்முறை என்று குறிப்பிட்டார்.
ஒரு சனநாயக சமுதாயத்தின் முக்கிய நிறுவனம் மீதும் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இளையோர் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக, நார்வே நாட்டவரான பாஸ்டர் Tveit தெரிவித்தார்.
வெறுப்பும் பழிவாங்குதலுமில்லாத நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்குவதற்கு அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.