நேர்காணல் – தலித் கிறிஸ்தவர்களின் உரிமைப் போராட்டம்
ஜூலை21,2011. அன்பர்களே, இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் “தாழ்த்தப்பட்டவர்
பட்டியலில்”சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுடெல்லியில் இம்மாதம் 25 முதல்
27 வரை அதாவது வருகிற திங்கள் முதல் புதன் வரை பெரும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவிருக்கின்றது.
28ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய நடைப்பயணத்தையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை
குறித்து அருட்பணி காஸ்மன் ஆரோக்யராஜ் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டோம். இவர் இந்திய
கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணக்குழுவின் செயலர்.