2011-07-20 16:51:00

தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 14 விழுக்காடு அதிகரிப்பு


ஜூலை 19,2011. தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை ஏறத்தாழ 14 விழுக்காடு அதிகரித்திருப்பதாக இச்செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
தமிழகத்தில் 1991ம் ஆண்டிலிருந்து நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த, தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன், கடந்த இருபது ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் 48.45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அறிவித்தார்.
32 மாவட்டங்களைக் கொண்ட தமிழகத்தில், ஏழு கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் வாழ்கின்றனர் எனவும், இவர்களில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் வீதம் இருப்பதாகவும், எனினும், நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் வீதம் இருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
கல்வியறிவு பெற்றவர்களின் விகிதம் 80.33 விழுக்காடாக இருக்கின்றது, இது 2001ல் 73.47 விழுக்காடாக இருந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகை பட்டியல் 120 கோடியாக இருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.