2011-07-19 16:35:19

மும்பை குண்டுவெடிப்புக்களில் பலியானவர்களுக்கென டெல்லி உயர்மறைமாவட்டத்தில் சிறப்புச் செப வழிபாடு


ஜூலை19, 2011. கடந்த வார மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியான 19 பேருக்கான சிறப்புச் செப வழிபாட்டை நடத்தியது டெல்லி உயர் மறைமாவட்டம்.
மதங்களிடையேயான இந்தச் செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்த டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ உரைக்கையில், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கிய இந்தச் செயல் மிகுந்த கவலை தருவதாக உள்ளது என்றார்.
தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து இத்தகைய அழிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகள் மனம் திருந்தவேண்டும் என செபிக்குமாறும் விண்ணப்பித்தார் பேராயர்.
கடந்த புதனன்று மும்பையில் இடம்பெற்ற மூன்று தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்தனர், ஏறத்தாழ 130 பேர் காயமடைந்தனர்.








All the contents on this site are copyrighted ©.