ஜூலை 19, 2011. கர்நாடக மாநிலத்தின் கர்வார் மறைமாவட்ட முதல் ஆயர் வில்லியம் லியோனார்டு
டி'மெல்லோ இச்செவ்வாயன்று தனது 80ம் வயதில் காலமானார். மங்களூர் மறைமாவட்டத்தின் Cascia
எனுமிடத்தில் 1931ம் ஆண்டு பிறந்த ஆயர் வில்லியம் டி'மெல்லோ, 1957ம் ஆண்டு பெங்களூர்
உயர்மறைமாவட்டத்தின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். கர்வார் என்ற புதிய மறைமாவட்டம்
உருவாக்கப்பட்டபோது அதன் ஆயராக 1977ம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 30 ஆண்டுகள்
தொடர்ந்து அம்மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைத்து, வயது மற்றும் உடல் நிலை காரணமாக
2007ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். சிலகாலம் நோயுற்றிருந்த ஆயர் வில்லியம் டி'மெல்லோ இச்செவ்வாய்க்
காலை இந்திய நேரம் 11 மணி 5 நிமிடங்களுக்கு, குரு முல்லர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
காலமானார்.