ஜூலை 18, 2011. காஸ்தல் கன்தோல்ஃபோ விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய இஞ்ஞாயிறு மூவேளை
செப உரையின் இறுதியில், துன்புறும் சொமாலியா நாட்டின் சர்வதேச அளவிலான ஒருமைப்பாட்டிற்கு
அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சொமாலியாவில் வறட்சியாலும் சில பகுதிகளின்
வெள்ளப்பெருக்காலும் ஏற்பட்டுள்ள மனிதகுல நெருக்கடி குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட
திருத்தந்தை, மிகப்பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற மக்கள் சொமாலியாவில்
உணவு தேடி அலைந்து கொண்டிருக்கும் வேளையில், சர்வதேச சமுதாயத்தின் உதவிகள் உடனடியாக அனுப்பப்படும்
என நம்பிக்கைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே திருப்பீடத்தின் பிறரன்பு அமைப்பான
'கோர் ஊனும்' அவை திருச்சபை அக்கறையின் அடையாளமாக எழுபதாயிரம் டாலர்களை சொமாலியா நாட்டிற்கு
அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.