2011-07-18 17:12:55

ஒரு மாதத்தில் மூன்று காரித்தாஸ் பணியாளர்கள் கொலம்பியாவில் கொலை


ஜூலை 18, 2011. கொலம்பிய நாட்டில் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய மூவர் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக அக்கத்தோலிக்க நிறுவனம் அறிவித்தது.
கொலம்பியாவின் கொர்தோபா மாநிலத்தில் தொடரும் இந்த வன்முறை நிகழ்வுகள், மக்களிடையே அச்சம், நிச்சயமற்ற நிலை, வேதனை மற்றும் ஏமாற்றங்களுக்கு இட்டுச் செல்வதாக கவலையை வெளியிட்டுள்ளது மறைமாவட்ட காரித்தாஸ் அறிக்கை.
எத்தகைய துன்பங்கள், இழப்புகள் வரினும், துன்புறும் மக்களிடையேயான தங்கள் பணிகள் தொடரும் எனவும், அதுவே இறைவார்த்தை மற்றும் திருச்சபையின் சமூகப்படிப்பினைகளின் ஒளியிலான பணி எனவும் கூறியுள்ளது கொலம்பிய காரித்தாஸ் அமைப்பு.







All the contents on this site are copyrighted ©.