பாகிஸ்தானில் குழந்தைத் தொழில்முறையை ஒழிப்பதற்கு திருச்சபைப் பணியாளர்கள் உறுதி
ஜூலை15,2011. பாகிஸ்தானில் குழந்தைத் தொழில்முறையையும் ஏழ்மையையும் ஒழிப்பதற்கு அந்நாட்டுத்
திருச்சபையின் சமூகப் பணியாளர்கள் உறுதி எடுத்தனர். பாகிஸ்தானில் இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட
குழந்தைத் தொழில்முறை எதிர்ப்பு நாளில் இவ்வாறு உறுதி வழங்கினர் திருச்சபையின் சமூகப்
பணியாளர்கள். பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகநல அமைப்பான காரித்தாஸ்,
குழந்தைத் தொழிலாளருக்குக் கல்வி வழங்குவதில் 2007ம் ஆண்டிலிருந்து தீவிர நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளது. சுமார் 360 குழந்தைத் தொழிலாளர் வேலை முடிந்து தினமும் மூன்று மணி நேரம்
பாடங்கள் படிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஊடகங்களின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில்
ஏறக்குறைய 33 இலட்சம் குழந்தைத் தொழிலாளர் இருக்கின்றனர். உலகில் வீட்டு வேலை செய்யும்
குழந்தைத் தொழிலாளரில் 60 விழுக்காட்டினர் ஆசியாவில் உள்ளனர். இவர்களில் 90 விழுக்காட்டினர்
சிறுமிகள் என்று சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நிறுவனம் கூறியது