2011-07-15 16:09:18

காங்கோவில் தட்டம்மை மற்றும் காலராவினால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு


ஜூலை15,2011. ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசில் தட்டம்மை மற்றும் காலராவினால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஃபீடெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1,15,484 பேர் தட்டம்மைக் கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 1,145 பேர் இறந்துள்ளனர்.
தற்சமயம் குறைந்தது 9,15,000 சிறாருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் இருப்பதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.