மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து இந்திய கிறிஸ்தவ அவை கண்டனம்
ஜூலை14,2011. அப்பாவி பொதுமக்களைத் தாக்குவதற்கான எந்தக் காரணமும் நியாயப்படுத்தப்பட
முடியாதது என அண்மை மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்
அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச்செயலர் ஜான் தயாள். தீவிரவாதிகள் ஒருநாளும் மனித
குலத்தின் நண்பர்களாக இருக்கமுடியாது என்ற அவர், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்
கிறிஸ்தவர்கள் தங்கள் செபங்களை ஒப்புக்கொடுப்பதாகவும் தெரிவித்தார். காவல்துறையும்
பாதுகாப்புத்துறையும் இத்தாக்குதல்களுக்கான மூலத்தை ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்வதுடன்,
பகை உணர்வுகள் மேலோங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஜான் தயாள். இதற்கிடையே,
உலகின் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களும் இத்தாக்குதல்கள் குறித்து தங்கள் கண்டனத்தை
வெளியிட்டுள்ளனர்.