2011-07-13 16:08:18

சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி நடைபெறும் ஆயர் திருநிலைப்பாடுகளுக்கு ஹாங்காக் கத்தோலிக்கர் எதிர்ப்பு


ஜூலை13,2011. சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி நடைபெறும் ஆயர் திருநிலைப்பாடுகளை எதிர்த்து ஹாங்காக் கத்தோலிக்கர், ஹாங்காக்கிலுள்ள சீன அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இவ்வியாழனன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஷன்ட்டூ ஆயர் திருநிலைப்பாடு உட்பட முறையின்றி நடத்தப்பட்ட எல்லா ஆயர் திருநிலைப்பாடுகளையும் இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், இத்தகைய நிகழ்வுகளில் சீன ஆயர்கள் கலந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது நிறுத்தப்படுமாறும் ஹாங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய கத்தோலிக்கர் சீன அதிகாரிகளை வலியுறுத்தினர்







All the contents on this site are copyrighted ©.