2011-07-13 16:07:22

சன்டியாகோ மறைமாவட்டம் - 450 வருட மக்கள் சேவை


ஜூலை13,2011. "கிறிஸ்து இன்றும், நேற்றும் என்றும்" என்ற தலைப்பில் சிலே நாட்டு சன்டியாகோ உயர் மறைமாவட்டம் தனது 450ம் ஆண்டைச் சிறப்பித்து வருகிறது.
1561ம் ஆண்டு திருத்தந்தை 4ம் பத்திநாதர் சன்டியாகோ உயர் மறைமாவட்டத்தை உருவாக்கியது பற்றிப் பேசிய பேராயர் Ricardo Ezzati, இம்மாதத்தில் அங்கு நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.
தென் அமெரிக்க நாடான சிலேயில் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டதன் 200ம் ஆண்டு சில வாரங்களுக்கு முன்னரும், சிலே நாட்டின் 200வது ஆண்டு கடந்த ஆண்டிலும் சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பேராயர், நாடு விடுதலை அடைவதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்கத் திருச்சபை அங்கு மறைப்பணியாற்றி வருகின்றது என்றார்.







All the contents on this site are copyrighted ©.