ஜூலை12,2011. வரும் ஆகஸ்ட் 15 முதல் 12 மாதங்கள் 'மறைபரப்பு ஆண்டு' எனக் கொண்டாடப்படும்
என்றும், இக்காலக் கட்டத்தில் அனைத்து விசுவாசிகளும் மறைபரப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்த
வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின்
புதிய தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி. வட இந்தியாவில் நற்செய்தி அறிவிப்புப் பணியை
கேரள கத்தோலிக்கத் திருச்சபை எடுத்து நடத்தத் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி
இதனை அறிவித்த பேராயர், திருமுழுக்குப் பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் நற்செய்தி அறிவிப்புப்பணிக்
கடமை இருப்பதையும் சுட்டிக் காட்டினார். மறைப்பணி தொடர்புடைய அனைத்துக் கடமைகளும்
திருச்சபையின் ஆன்மீகப் புதுப்பித்தலை நோக்கமாகக் கொண்டவை என்பதையும் தன் மேய்ப்புபணி
சுற்றறிக்கையில் எடுத்தியம்பியுள்ளார் பேராயர் ஆலஞ்சேரி