கொலைக் குற்றவாளிகளில் பாதிப்பேர் பெண்கள்: திகார் சிறை அதிகாரி தகவல்
ஜூலை11,2011. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலைக் குற்றவாளிகளில், பாதிப்பேர் பெண்கள்
என, சிறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக,
திகார் சிறையில் அடைக்கப்பட்ட 2,751 பேரில் 25 விழுக்காட்டினர் தண்டனை உறுதி செய்யப்பட்ட
குற்றவாளிகள், ஏனைய 75 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள் எனவும் உரைத்த அவர், தண்டனை
உறுதியான குற்றவாளிகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்களில் பாதிப்பேர் வரை பெண் கைதிகள்
என்றும் கூறினார். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகளில், 46.15 விழுக்காட்டினர்
பெண் கைதிகள்; ஆண்கள் 33.47 விழுக்காடு மட்டுமே எனவும் கூறினார். பெண் கைதிகளில்
பெரும்பாலானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், மற்றும், கடந்த 2009 மற்றும்
2010ம் ஆண்டுகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளிகளுள் பெரும்பாலானோர் கொலை,
ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை
விதிக்கப்பட்டவர்கள் என மேலும் கூறினார் அந்த அதிகாரி.