2011-07-09 15:56:39

திருச்சபை சட்டத்துக்குப் புறம்பேயான ஆயர் திருநிலைப்பாடுகளில் சீன ஆயர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்ய குருக்கள் முயற்சி


ஜூலை09,2011. சீனாவில் திருத்தந்தையின் ஒப்புதலின்றி ஆயர் திருநிலைப்பாடு வழங்குவதற்கு அந்நாட்டில் ஆயர்கள் கட்டாயப்படுத்தப்படும்வேளை, இதற்காக ஷென்யாங் ஆயர் கட்டாயமாக தனது இல்லத்தை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுப்பதற்கு அருட்பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஷென்யாங் ஆயர் Paul Pei Junmin என்பவர், Shantou வில் அருட்பணி Joseph Huang Bingzhang என்பவரை இம்மாதம் 14ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்துவதற்குச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார். இவர் கட்டாயமாக அங்கு அழைத்துச் செல்லப்படக்கூடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மறைமாவட்ட அருட்பணியாளர்கள் ஷென்யாங் ஆயர் இல்லத்தின் முன்பாகக் கூடியிருக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.
சீன அரசு அதிகாரிகளின் ஆயர்கள் மீதான வற்புறுத்தல் வலுவாக இருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.