ஐரோப்பாவில் நிதிப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜூலை08,2011. ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை, மற்றும் வருவாய்க் குறைவுப் பிரச்சனைகளால்
தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை 2007ல் இருந்ததைவிட 2009ல் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள்
இவ்வெள்ளிக்கிழமை கூறினர். நிதி நெருக்கடியால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக,
கிரேக்கத்தையும் அயர்லாந்தையும் குறிப்பிடும் அவ்வாய்வாளர்கள், 2007க்கும் 2009க்கும்
இடைப்பட்ட காலத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன என்றும் கூறினர். வாகனங்களைப்
பயன்படுத்தியோரின் எண்ணிக்கைக் குறைவே இதற்குக் காரணமாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்கொலை விகிதம், கிரேக்கத்தில் 17 விழுக்காடும் அயர்லாந்தில் 13 விழுக்காடும் அதிகரித்ததாகவும்
பத்து ஐரோப்பிய நாடுகளில் எடுத்த ஆய்வு தெரிவிக்கிறது.