கிராமப்புற வாழ்வு மதிப்பீடுகளுக்குச் சாட்சியாக செயல்படுமாறு விவசாயிகளுக்குத் திருத்தந்தை
அழைப்பு
ஜூலை07,2011. கிறிஸ்தவ நாகரீகம் மற்றும் விசுவாசத்தினால் வழிநடத்தப்பட்டு, கிராமப்புற
வாழ்வு மதிப்பீடுகளுக்குச் சாட்சியாகச் செயல்படுமாறு இத்தாலிய விவசாய கூட்டமைப்பின் அங்கத்தினர்களுக்கு
அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். Coldiretti என அழைக்கப்படும் தேசிய
விவசாய சங்கத்தின் ஏறத்தாழ 15 ஆயிரம் விவசாயிகள் உரோம் நகரில் கூடி விவாதித்து வரும்
கூட்டத்திற்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே
அனுப்பியுள்ள செய்தியில், திருச்சபை படிப்பினைகளைப் பின்பற்றி, குடும்பத்தின் பாதுகாப்பு,
சமூக வளர்ச்சி,பொருளாதார முன்னேற்றம் ஆகியவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கும் விவசாயிகளின்
பணிகள் பாராட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கானத் திருத்தந்தையின் செபம் மற்றும் ஊக்கமும்
அச்செய்திவழி உறுதி கூறப்பட்டுள்ளது.