ஜூலை07,2011. ஜூலை 10, வருகிற ஞாயிறன்று திருச்சபையில் கடல் ஞாயிறு சிறப்பிக்கப்படுகின்றது.
கத்தோலிக்கத் திருச்சபை உலகின் முக்கிய துறைமுகங்களில் அலுவலகங்களை அமைத்து கடல்சார்
தொழிலாளிகளுக்கென 1920ம் ஆண்டிலிருந்து மேய்ப்புப்பணி செய்து வருகின்றது. கப்பல் போக்குவரத்து,
கப்பல் வணிகம் உட்பட கடல்சார் தொழில்களில் உலகில் சுமார் 15 இலட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
அருட்பணி முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ், தமிழகத்தில் மீனவர் நலனுக்காகக் குரல் கொடுத்து
வருபவர். தூத்துக்குடி மறைமாவட்டத்தை சேர்ந்த இவரை கடல் ஞாயிறை முன்னிட்டுத் தொலைபேசியில்
தொடர்பு கொண்டோம்