2011-07-01 14:56:10

ஜூலை 02. வாழ்ந்தவர் வழியில் ....


அமெரிக்க எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே 1899ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி பிறந்தார். 20-ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிருந்து 1950-களின் மத்தியில் வரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாப்பாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்குக் காரணம். ஏழு நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு புனைவற்றப் புத்தகங்ளையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே பதிப்பித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்குப் பிறகு மூனறு நாவல்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டன. கடலும் கிழவனும் (The Old Man and the Sea) என்ற நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கானப் புலிட்சர் பரிசும் 1954 இல் இலக்கியத்துக்கான நொபெல் பரிசும் வழங்கப்பட்டன. இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவர், 1961ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.