2011-06-30 16:06:39

கர்தினால் Georg Sterzinsky இறைபதம் அடைந்தார்


ஜூன் 30,2011. ஜெர்மனியின் பெர்லின் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் Georg Sterzinsky இவ்வியாழன் காலை இறைபதம் அடைந்தார்.
இவ்விறப்பையொட்டி பெர்லின் உயர்மறைமாவட்டத்திற்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினால் Sterzinsky தலத்திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டியிருப்பதோடு அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1936ம் ஆண்டு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கர்தினால் Sterzinskyயின் குடும்பமும், ஜெர்மனியின் மற்ற குடும்பங்களைப் போலவே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946ம் ஆண்டில் Thüringen என்ற ஊரில் புகலிடம் தேடியது. பின்னர் தனது படிப்பைத் தொடர்ந்த அவர், 1960ல் குருவானார். 1989ல் பெர்லின் ஆயரானார். 1991ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் Sterzinskyன் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 197. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.








All the contents on this site are copyrighted ©.