ஆசிய நாடுகளில் தேர்தல் கால ஊழல்கள் ஒழிக்கப்பட ஐ.நா.அழைப்பு
ஜூன் 30,2011. ஆசிய நாடுகள் தேர்தல் காலங்களில், ஊழல்கள் மற்றும் பொய்யான நடவடிக்கைகளுக்குத்
தள்ளப்பட்டுள்ளன, எனவே தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உறுதியான
நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.அறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது. UNDP என்ற ஐ.நா.வின்
வளர்ச்சித் திட்ட அமைப்பு, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,
தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆய்வு செய்து “ஆசியாவில் தேர்தல் வன்முறையைப் புரிந்து கொள்ளுதல்”
எனும் தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளது. சந்தேகமும் புகார்களுமே,
சனநாயகங்களில் மக்களின் நம்பிக்கைகளை இழப்பதற்குப் போதுமானவைகளாக இருக்கின்றன என்றும்
அவ்வறிக்கை கூறுகிறது.